மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பேரணி


   புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
   அரசு பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி கீழராஜ வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்று புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
   மேலும் புகையிலை அரக்கன் என்ற உருவ பொம்மையை உருவாக்கி அதனை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்த வினோத நிகழ்வும் பேரணியில் நடைபெற்றது. பேரணியின் போது புகையிலையின் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.
                                       -இணைய செய்தியாளர் - s.குருஜி