இது ஒரு ஆர்பாட்டம் இல்லாத டுபாகூர்!

       கடந்த சில ஆண்டுகளாக பல விசித்திரமான செய்கைகள் மூலம் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தவர் விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் கூறிக் கொண்டு பல இடங்களில் பிரமாண்ட ஆசிரமங்களை எ
ழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் தடா அருகில் வரதையபாளையத்தில் பிரமாண்டமான ஆசிரமத்தைக் கட்டியுள்ள இந்த விஜய்குமார் நாயுடு, தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம் வசூலிக்கிறார். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம் செலுத்த வேண்டுமாம். வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களை 21 நாள் பேக்கேஜ் என்ற திட்டத்தின் கீழ் தங்க வைத்து போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத கேளிக்கைகளை வழங்குகிறார்களாம் இந்த ஆசிரமத்தில். அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 வரையும் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. விஜய்குமார் நாயுடு நடத்தும் 9 நிறுவனங்களின் மீதும் புகார்கள் தரப்பட்டுள்ளன. இது தவிர, ஏராளமான பெண்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு விருந்தளிக்கப்படுவதாகவும் வரதையபாளையம் போலீஸில் புகார் செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
-இணைய செய்தியாளர் - தங்கமுருகேசன்